செய்திகள்
கார் மீது வேகமாக மோதிய போலீஸ் வேன்.. ஒரு பெண் பலி.. அதிர்ச்சி வீடியோ….
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிமுறைகளை மதித்தும் பயணிக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்களை சந்திக்க நேரிடும். இதில் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகும்.
சிலர் சாலை விதிமுறைகளை கடைபிடித்து சரியாக பயணித்தாலும், எதிர்புறம் வருபவர்கள் படு வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விடுவார்கள். இப்படித்தான் பல விபத்துக்கள் நடக்கிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் வேகமாக சென்ற ஒரு போலீஸ் வேன் எதிரே வந்த ஒரு கார் மீது மீதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், காரில் சென்ற ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும், வேனில் இருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர். இத்தனைக்கும், விதிமுறையை மீறி அந்த போலீஸ் வேன் தவறான பாதையில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
Police van cruising at high speed on the wrong path hits a car at Arani of Thiruvannamalai district.
One woman died on the spot and 12 others severely injured. pic.twitter.com/iyjsw7iR52
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) September 17, 2021