செய்திகள்

பைக்கை திருடி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

Published

on

திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்கவும், கொள்ளை நடந்தால் குற்றவாளிகளை பிடித்து திருட்டுப்போன பொருட்களை உரியவரிடம் சேர்க்கும் பணிதான் காவலர்களுடையது. ஆனால், சில காவல்துறை அதிகாரிகளே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவம் சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்து வருகிறது. பகலில் போலீஸ் இரவில் கொள்ளைக்காரன் என வலம் வந்த ஒரு காவல்துறை அதிகாரி சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

தற்போது நாகூர் கடற்கரையில் ஒரு சுற்றுலாப்பயணியின் பைக்கை காவலர் ஒருவர் திருடி செல்லும் போது அங்கிருந்த பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை பொதுமக்கள் விசாரிப்பதோடு, அதை வீடியோவும் எடுத்தனர். வீடியோ எடுக்க வேண்டாம் என அவர் கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் நான் சரண்டர் ஆகிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால், அவர்கள் விடவில்லை. அதன்பின் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்த வீடியோ வைரலாகி காவல்துறையின் கவனத்திற்கு சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காவல்துறை அதிகாரியே பட்டப்பகலில் ஒருவரின் பைக்கை திருடி செல்ல முயற்சி செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Maheen83086711/status/1423344052150411266

seithichurul

Trending

Exit mobile version