தமிழ்நாடு
இப்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. நக்கீரன் கோபால் கைதில் கறார் காட்டிய போலீஸ்
![4 (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/4-1-1.jpg)
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீசை கெடுபிடியாக இருந்துள்ளது.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
நக்கீரனை கோபாலை அவரது வழக்கறிங்கரை சந்திக்க போலீஸ் அனுமதிக்கவில்லை. கடைசியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் சில நிமிடங்கள் மட்டுமே இவர்கள் சந்தித்து இருக்கிறார்கள்.
அந்த சந்திப்பு முன்பு வரை நக்கீரன் கோபால் மீது என்ன மாதிரியான வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்ற உண்மை நிலவரம் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞருக்கு தெரியாமல் இருந்துள்ளது.
இவர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்றும் போலீஸ் நேரடியாக தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.