செய்திகள்

பேண்ட்டில் ஒன்றரை அடி நீள வெட்டுக்கத்தி.. போலீசாரிடம் சிக்கிய வாலிபர் (வீடியோ)..

Published

on

எவ்வளவுதான் போலீசார் கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றங்கள் என்பது சம்பந்தப்பட்டவரின் மனநிலையோடு தொடர்புடையது என்பதால், எப்போது எங்கே குற்றங்கள் நடக்கும் என போலீசாராலும் கணிக்க முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை கூலிப்படை மூலமாகத்தான் பல பழிவாங்கும் கொலைகள் நடந்து வருகிறது. அதன்ப்ன் கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்வார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன? அவர்கள் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்களா? என எந்த தகவலுமே வெளியாகாது. ஏனெனில், ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அடுத்தடுத்த செய்திகளுக்கு சென்று விடுவார்கள்.

இந்நிலையில், சென்னை அருகேயுள்ள தாம்பரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரில் அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்த போது தனது பேன்ட்டில் மறைத்து வைத்திருந்த ஒன்றரை அடி நீள வெட்டுக்கத்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூட திருச்சி அருகே எஸ்.ஐ. ஒருவர் ஆடு திருடும் சிறுவன் ஒருவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version