தமிழ்நாடு
சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை!
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்வதற்கு தடை என காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆன்லைனில் தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்களின் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பாடம் நடத்திவிட்டு நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும், இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்த வலியுறுத்தி மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் காரணமாகவே சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.