சினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்!

Published

on

தனது சொந்த மகளை கடத்தியதாக வனிதா மீது அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின் பேரில் தெலுங்கான போலீசார் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை கைது செய்ய போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை வனிதா கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளார்கள். பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, 2007-ஆம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் உள்ளார். இதனையடுத்து வனிதா 2010-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார். இதனையடுத்து ஜெயந்திகா தனது தந்தையுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சிக்கு வனிதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். இந்த சூழ்நிலையில் தெலுங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் வனிதாவை கைது செய்ய தெலுங்கான போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன் தெலங்கானா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வனிதாவிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். வனிதாவின் மகள் ஜோவிகாவை அவரது வழக்கறிஞர் அழைத்து வந்ததும் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மனித உரிமை ஆணைய துணைத்தலைவர் வசுந்தராவிடம் ஜோவிகா அளித்த வாக்குமூலத்தில், தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version