Connect with us

சினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்!

Published

on

தனது சொந்த மகளை கடத்தியதாக வனிதா மீது அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின் பேரில் தெலுங்கான போலீசார் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை கைது செய்ய போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை வனிதா கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளார்கள். பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா, 2007-ஆம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் உள்ளார். இதனையடுத்து வனிதா 2010-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார். இதனையடுத்து ஜெயந்திகா தனது தந்தையுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சிக்கு வனிதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார். இந்த சூழ்நிலையில் தெலுங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் வனிதாவை கைது செய்ய தெலுங்கான போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன் தெலங்கானா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வனிதாவிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். வனிதாவின் மகள் ஜோவிகாவை அவரது வழக்கறிஞர் அழைத்து வந்ததும் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மனித உரிமை ஆணைய துணைத்தலைவர் வசுந்தராவிடம் ஜோவிகா அளித்த வாக்குமூலத்தில், தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!