தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார்: நீதிமன்றத்தில் ஆஜர்!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் தலைமறைவாகியதை அடுத்து அவரை தனிப்படைகள் தேடி வந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் விருதுநகர் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய ரூபாய் 3 கோடி மோசடி வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போலீசார் விசாரணை செய்ததாகவும் இந்த விசாரணையின்போது பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசாரின் விசாரணைக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version