தமிழ்நாடு

போலிசார் துப்பாக்கிச்சூடு: சென்னையில் பதற்றம்!

Published

on

சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மகாராஜன் என்பவர் கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மகாராஜனை தேடி அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய கேரள போலீசார் சென்னை விருகம்பாக்கத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது சென்னையில் உள்ள மகாராஜனின் உறவினர்கள் அவரை போலீசார் கைது செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் மகாராஜன் தப்பித்துசெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் விருகம்பாக்கம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

seithichurul

Trending

Exit mobile version