சினிமா

வனிதாவை தொடர்ந்து மீரா மீதும் போலீஸ் புகார்: பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையுமா போலீஸ்?

Published

on

நடிகர் கமல் ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டுள்ள இரண்டு போட்டியாளர்கள் மீது போலீஸில் புகார் உள்ளதால் அவர்களை தேடி போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும், பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் தனது மகள் ஜோவிகாவை கடத்தியதாக புகார் ஒன்றை அளித்தார். இதன் அடிப்படையில் வனிதாவை விசாரிக்க போலீஸார் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ஓய்வதற்குள் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றொரு போட்டியாளர் மீரா மீதும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக சென்னை தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஜூலை 19-ஆம் தேதிக்குள் மீரா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பினர். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீரா மிதுன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால், தற்போது ஆஜராக முடியாது என்றும் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version