சினிமா செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவரும் ரகசிய திருமணம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விஷ்ணு சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரவுடிகள் பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது ரவுடிகளை ஊக்கப்படுத்துவதாகும் என்று அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரவுடிகளை ஊக்கப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விக்னேஷ் சிவன் தரப்பில் கூறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது அளிக்கப்பட்டிருக்கும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version