சினிமா செய்திகள்

நடிகை கரீனா கபூருக்கு எதிராகப் போலீஸ் புகார்… கிறிஸ்துவ அமைப்புகள் கண்டனம்!

Published

on

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிராகப் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கரீனா கபூர் சமீபத்தில் தனது இரண்டு மகப்பேறு குறித்த அனுபவங்களை மொத்தமாகத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். ‘கரீனா கபூர் கானின் மகப்பேறு பைபிள்’ என அந்தப் புத்தகம் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கரீனா கபூருக்கு எதிராக கிறித்துவ அமைப்புகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.

Kareena Kapoor Khan's book 'Pregnancy Bible' trends as 'Number One Bestseller'

பைபிள் என்னும் புனிதமான வார்த்தையை கரீனா கபூர் உபயோகித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். கரீனா கபூர் மற்றும் அவர் அந்த புத்தகத்தைத் தொகுக்க உதவிய மேலும் 2 பேர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மதத்தை இழிவுபடுத்துவதாக கரீனா மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கரீனா கபூர் கானின் இந்தப் புத்தகத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளும் ஆதரவுகளும் கிடைத்துள்ளன. இந்தப் புத்தகத்தை தனது உணர்வால் தொகுத்துள்ளதாகக் கூறியுள்ளார் கரீனா.

Trending

Exit mobile version