இந்தியா
அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர்.
அதை அறியாத காவலர் ஒருவர், 144 தடை உத்தரவு இருக்கும் போது, கடை முன்பு கூட்டமாகக் கூடி இருக்கிறார்கள் என்று வந்த வேகத்தில் அடித்து வெளுத்துக்கட்டியுள்ளார்.
பின்னர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், சமாதானம் ஆன காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.