தமிழ்நாடு
யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது: 4 பிரிவுகளில் வழக்கு என தகவல்!
சமீபத்தில் காவல் நிலையத்தில் காலமான கல்லூரி மாணவர் மணிகண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் போர்ஜரி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது மோசடி உள்பட 4 பிரிவுகளில் பதிவு செய்ய வழக்கில் மாரிதாஸ் கைதாகியுள்ளார். ஏற்கனவே ஹெலிகாப்டர் விபத்து மற்றும் கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபில் வீடியோ வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தேனி சிறையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் போர்ஜரி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.