தமிழ்நாடு
ரேசன் கடைகளில் தாமதம்: பொதுமக்கள் அதிருப்தி
![ration shop - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/ration-shop.jpg)
சர்வர் பிரச்சனை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருள் வாங்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தினந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து இந்த பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆப் சேல் என்னும் கருவி சர்வர் பிரச்சனை காரணமாக வேலை செய்யவில்லை. இதனை அடுத்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட நேரமாக தமிழகம் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக பாயிண்ட் ஆப் சேல் கருவி முடங்கி உள்ளதாகவும் இதனை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த கோளாறு சரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாயிண்ட் ஆப் சேல் கருவியால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காத்திருக்கும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.