சினிமா செய்திகள்
திருமணம் முடித்த மறுநாளே ஷூட்டிங்- பிஸி நடிகரான கவிஞர் சிநேகன்!
![snehan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/snehan.jpg)
கவிஞர் சிநேகன் தனக்குத் திருமணம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே மாறிமாறி இரண்டு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
பாடல் ஆசிரியராக சினிமாவில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளவர் சிநேகன். இவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தான் கவிஞர் சிநேகனுக்குத் திருமணம் முடிந்தது.
சிநேகன் தனது நீண்ட நாள் காதலி ஆன சின்னத்திரை நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடித்த மறு நாளில் இருந்தே அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புகளில் மனைவி உடன் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார்.
சிநேகன் தற்போது நடிகர் கெளதம் கார்த்திக் உடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்திலும், இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘அருண் விஜய் 31’ படத்தில் நடித்து வருகிறார். ஹரி படத்துக்காக தூத்துக்குடிக்கு தனது மனைவியுடன் பயணம் செய்யும் போது எடுத்தப் புகைப்படத்தை சிநேகன் பதிவிட அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.