சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்ரன்..!

Published

on

கவிஞ்சர் மனுஷ்யபுத்ரன் தற்போது நடிகர் சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இதையடுத்து மாநாடு படமும் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளதாம். இதனால் அடுத்து பத்து தல படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார் எஸ்டிஆர். பத்து தல படத்தில் சிம்பு உடன் நடிகர் கெளதம் கார்த்திக்-கும் நாயகனாக நடிக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக சமீபத்தில் தான் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆனார். இதற்கடுத்ததாக தற்போது கவிஞர் மனுஷ்யபுத்ரன் படக்குழுவினருடன் நடிகராக இணைந்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் அசுரன் படப் புகழ் டிஜே என்பவரும் இணைந்துள்ளார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்க உள்ளார்.

Trending

Exit mobile version