தமிழ்நாடு
’என் வாழ்நாளில் அரசியல் மாற்றத்தைப் பார்க்க முடியாதா?’- பாமக ராமதாஸ் வேதனை
’என் வாழ்நாளில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் என்ற ஒன்றை பார்க்கவே முடியாதா’ என பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வரும் சூழலில் பல கட்சிகளும் கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் பாமக கூட்டம் ஒன்றில் அந்தக் கட்சியின் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
ராமதாஸ் பேசுகையில், “அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு, கனவாக மட்டுமே போகுமா? என்னுடைய வாழ்நாளில் அரசியல் மாற்றத்தைக் காணவே முடியாதா? வருகிற தேர்தலில் பாமக தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைப் போலப் பணியாற்ற வேண்டும். அப்படி என்றால் தான் நாம் வருகிற தேர்தலில் வெற்றி காண முடியும்” எனப் பேசினார்.