தமிழ்நாடு

இனி இப்படி நடக்கவே கூடாது.. விட்டு விளாசிய பாமக ராமதாஸ்.. பரபரப்பு ஸ்டேட்மென்ட்

Published

on

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இன்று அதிகாலை 16 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற் அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அவர்கள் எல்லை தாண்டவில்லை என்ற போதும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இதற்கு எதிராக பாமக நிறுவனம் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். ராம்தாஸ் வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது!

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

seithichurul

Trending

Exit mobile version