தமிழ்நாடு

தனித்து போட்டி: பாமகவின் திடீர் அறிவிப்பால் தேசிய ஜனநாயக கூட்டணி அதிர்ச்சி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது என்பதும் அக்கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இருந்து 23 தொகுதிகளில் கிடைத்து உள்ளன என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து முடிவு எடுத்து அதிகாரபூர்வமாக தொகுதிகளின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிமுக-பாமக கூட்டணி போலவே புதுவையிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட பாமக முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக 5 தொகுதிகளை கேட்டதாகவும் ஆனால் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version