Connect with us

தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக: தனித்து போட்டி என அறிவிப்பு!

Published

on

கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிமுக – பாமக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இதனை அடுத்து அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கக் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாறு ஜிகே மணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (05/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

2024-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்கள்

வணிகம்2 நாட்கள் ago

2025-ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் சராசரியாக 9.5% வரை உயரும்! வெளியான முக்கிய ஆய்வு அறிக்கை!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (03/10/2024) ராசிபலன்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய (02/10/2024) ராசிபலன்

தனியார் வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்: உடல் சோர்வு முதல் தலைவலி வரை!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் அருள் பெறும் வழிபாடு!

ஜோதிடம்4 நாட்கள் ago

மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.42,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (30/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

அக்டோபர் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

தினபலன்7 நாட்கள் ago

செப்டம்பர் 29 – இன்றைய ராசி பலன்கள்!

ஜோதிடம்5 நாட்கள் ago

சூரிய கிரகணம் 2024: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!