இந்தியா
இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த தினம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எட்டாவது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ’உலக அளவில் யோகா ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் யோகா இந்த உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைதியை இணைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றும் அனைத்து நாடுகளும் யோகா தினத்தை கொண்டாடுவதற்காக நன்றி கூறுகிறேன் என்றும் பிரதமர் மோடி கூறினார்.