கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியை சந்தித்து விளையாடி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முதல் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் டுவிட்டர் வாழ்த்து செய்தியில், இன்று தொடங்கும் இந்திய அணியின் உலகக்கோப்பை பயணத்திற்காக ஒட்டுமொத்த அணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டையும், மேம்பட்ட விளையாட்டுதிறனையும் பாப்போம் என நான் நம்புகிறேன். விளையாட்டோடு இதயங்களையும் வென்றெடுங்கள் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version