இந்தியா

போப் ஆண்டவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி: 30ஆம் தேதி என தகவல்!

Published

on

வாடிகனில் போப் ஆண்டவரை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற இருக்கும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் இன்னும் ஒரு சில நாட்களில் இத்தாலி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகருக்கு சென்று போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜி20 மாநாட்டை முடித்துவிட்டு அதன்பின்னர் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெறும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் ஒருவர் போப்பாண்டவரை வாட்டிகன் நகரில் சந்திக்க இருக்கும் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version