இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி: இன்று இரவு பிரதமர் அவசர ஆலோசனை

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் நேற்று இரண்டு லட்சத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை செய்ய உள்ளார். பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை உள்ளதாகவும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக அவர் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அவசர ஆலோசனைக்கு பின்னர் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவசர ஆலோசனை முடிவுக்கு பின் பிரதமர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version