தமிழ்நாடு
தமிழகம் வரும் பிரதமர் மோடி: எதிர்ப்புகளை சமாளிப்பாரா?
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்த கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட வராத பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் ஜனவரி மாதம் தமிழக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்திலுள்ள பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி வரும் ஜனவரி மாதம் இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 27-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கவுள்ளதாகவும், அவர் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வராத பிரதமர் மோடி அதுபற்றி சிறு வருத்தம் கூடாத தெரிவிக்காத நிலையில் தேர்தலுக்காக தமிழகம் வர உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள.
கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் கோ பேக் மோடி என்ற ஹாஷ்டாக் ட்விட்டரிலும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.