இந்தியா
கார்பேர்ட் நிறுவனங்களின் ரூ. 3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தள்ளுபடி தொகையானது 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான 35,000 கோடி ரூபாயினை விட 10 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உதவுவதற்காகக் கொண்டு வந்த திட்டத்திற்கு நிதி அளிக்க முடியாத மோடி அரசு 15 கோடீஸ்வரர்களின் கடனைத் தள்ளுபடி செய்திருப்பது கொடுமை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.