Connect with us

இந்தியா

“போராட்டத்தை முடியுங்கள்… பேசலாம்…”- விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் மோடி ரிக்வஸ்ட்

Published

on

மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகளின் ஒற்றைக் கோரிக்கை, ‘அனைத்து வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப் பட வேண்டும்’ என்பது மட்டும் தான். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘வேளாண் சட்டங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக ரத்து செய்ய முடியாது’ என்கிற நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறது.

இது குறித்து சுமூகத் தீர்வை எட்ட இரு தரப்புகளும் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் நடத்தின. ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளது மத்திய அரசு. அதேபோல அடிப்படை தேவைகளையும் முடக்கியுள்ளது. இதனால் பல தரப்பினரும் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக சர்வதேச அளவில் பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

உங்கள் போராட்டங்களை முடித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் உட்கார்ந்து பேசி சுமூகத் தீர்வை எட்டலாம். நாடாளுமன்றம் சார்பில் உங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நான் அழைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை என்பது விவசாயப் பயிர்களுக்கு இருக்கும். அது இந்தச் சட்டங்கள் மூலம் அகற்றப்படாது. நாம் அனைவரும் முன்னேற வேண்டும். வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். வேளாண் சட்டங்கள் மூலம் வரும் சீர்திருத்தங்கள் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசினார் மோடி.

 

இந்தியா54 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!