இந்தியா
விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்து: தமிழில் டுவீட் போட்ட பிரதமர்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தனது இரங்கலை டுவிட்டரில் தமிழில் பதிவு செய்துள்ளார்.
மேலும் தேசிய நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: