இந்தியா

பிரதமர் மோடி தமிழில் டுவிட்.. வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கனுமாம்!

Published

on

வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கும்படி பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நேற்று (டிச.17) ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார். அதில், ‘’பொய்த் தகவல்கள் – உண்மைத் தகவல்கள்’ என்று ஒரு பட்டியலை வெளியிட்டிருந்ததுடன், விவசாயிகளுக்கு சில வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘வேளாண் துறை அமைச்சர் @nstomer தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version