தமிழ்நாடு
திமுகவை பற்றி பேச பிரதமருக்கும் உபி முதல்வருக்கும் தகுதி கிடையாது: ஸ்டாலின்
திமுகவை பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கும் உத்தரபிரதேச முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் திமுகவால் பெண்களுக்கு ஆபத்து என்றும் பெண்களை அவமதிக்கும் கட்சி திமுக என்றும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தையும் திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உத்தரபிரதேச முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது என்று கூறியுள்ளார்.
பிரதமரும் உபி முதல்வரும் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக உத்தரபிரதேசம் தான் உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியது ஓபிஎஸ் தான் என்றும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் கண்டுபிடிக்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய தேர்தல் பிரச்சார மேடையில் கூறினார்.