இந்தியா
என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி: பிரதமர் மோடி
என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார்.
விமான நிலையத்திலிருந்து நலத்திட்ட திட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கார் மூலம் பிரதமர் மோடி சென்றுகொண்டிருந்தபோது திடீரென விவசாயிகள் சாலை மறியல் செய்ததால் பிரதமர் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மீண்டும் விமான நிலையம் திரும்பினார்.
விமான நிலையத்தில் பஞ்சாப் மாநில காவல் துறையிடம் அவர் கூறியபோது உங்கள் முதல்வரிடம் நான் உயிரோடு செல்ல அனுமதித்தது நன்றி என்று கூறுங்கள் என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் மாநில காவல்துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.