Connect with us

இந்தியா

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி சீனா, பாகிஸ்தானுக்கு விடுத்த எச்சரிக்கை!

Published

on

பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ வீரர்களுடன் பஞ்சாப் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடினார். 2016-ம் ஆண்டு இந்தோ-திபெத் எல்லைப் பகுதி இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜாஈரின் குரோஸ் பகுதியிலும், 2018-ம் ஆண்டு இந்திய – சீனா எல்லை முகாமில் தீபாவளியைக் கொண்டாடினார்.

2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2020-ம் ஆண்டின் தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்திய வரர்கள் எல்லையைப் பாதுகாப்பதைத் தடுக்க முடியாது. அதைச் சோதித்தவர்களை அரசியல் ரீதியாகவும், பலத்தின் மூலமாகவும் தகுந்த பதிலடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய ஒரு போது தங்களது நலன்களுக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் அறிந்து இருக்கிறது என்று பிரதமர் மோடி மறைமுகமாகச் சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி இதுபோன்று எச்சரிக்கை விடுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல, சென்ற வாரம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதும், அனைவரின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

ஜூலை மாதம் இந்திய – சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் 20 இராணுவ வீரர்கள் இறந்த போது திடீரென்று சென்ற பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்துக்கான காலம் எல்லாம் முடிந்துவிட்டது, எல்லை விரிவு படுத்தியவர்கள் இழந்ததையும், கட்டாயத்தின் பேரில் திரும்பிச் சென்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்று நம்பப்படும் எல்லைப் பகுதியில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதை இந்தியா நிறுத்தாது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது ஆதாரமற்றது, மிகைப்படுத்தி இந்தியா கூறுகின்றது என்று சீனா கூறியது.

நேற்று பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடச் சென்ற பிரதமர் மோடி சூசகமாகப் பாகிஸ்தான், சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 1971-ம் ஆண்டு லோங்கேவாலா போரில், மிகப் பெரிய பாகிஸ்தான் இரணுவத்தை இந்தியாவின் சிறிய இராணுவ குழு விரட்டி அடித்ததை நினைவு கூர்ந்த மோடி, எல்லையில் தங்களது வீரத்தைச் செலுத்திய வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!