தமிழ்நாடு
ஜெயலலிதா பிறந்தநாள்; நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாளை, அதிமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அவர், ‘ஜெயலலிதா ஜியை அவரது பிறந்தநாளன்று நினைவுகூர்கிறேன். மக்கள் நலத் திட்டங்களுக்காகவும், எளிய மக்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் அவரைப் பலரும் வியந்து பார்ப்பது உண்டு.
Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She is widely admired for her pro-people policies and efforts to empower the downtrodden. She also made noteworthy efforts to empower our Nari Shakti. I will always cherish my several interactions with her. pic.twitter.com/nyV3xz1Lb8
— Narendra Modi (@narendramodi) February 24, 2021
பெண்கள் முன்னேற்றத்துக்கும் அவர் அதிக பாடுபட்டார். நான் அவருடன் பல முறை உரையாடியதை எப்போதும் நினைவில் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.
இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைப் போலவே சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.