தமிழ்நாடு
மதுரையில் மிகவிரைவில் எய்ம்ஸ் – சொல்கிறார் பிரதமர் மோடி!
சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத் தரத்தில் கட்டப்படும் என்று மதுரை தேர்தல் பொதுக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
‘தேசிய ஜனநாயக கூட்டணி’ சார்பில் மதுரையில் இன்று மாபெரும் தேர்தல் பரபுரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
PM Shri @narendramodi addresses public meeting in Kanyakumari, Tamil Nadu.
Dial 9345014501 to listen LIVE.#VanakkamModiJi https://t.co/rxzNFZVQbb
— BJP (@BJP4India) April 2, 2021
தமிழ்ப் பண்பாட்டின் மையமாக மதுரை திகழ்கிறது. தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ்ந்திட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
தமிழர்களின் கலாச்சாரத்தை தாங்கள் தான் பாதுகாக்க உள்ளோம் என்று கூறும் அருகதை திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கிடையாது. 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ தான் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. திமுகவைச் சேர்ந்த பலர் அப்போது அந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தார்கள்.
2. We are increasing incomes through major push to blue economy.
New fishing harbours, fish landing centres are coming up. A fishing harbour will come up in Chennai. Fishermen are getting better boats, navigation materials and credit.Sea weed cultivation is being encouraged. pic.twitter.com/YAfSIDYCQv
— BJP (@BJP4India) April 2, 2021
அந்த நேரத்தில் தான் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் அரசு தடை செய்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டித் தனமான விளையாட்டு என்று கொச்சைப் படுத்தினார். தமிழர்களின் கலாச்சாரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு பண்பாடு சார்ந்த விளையாட்டை அப்படித் தான் அழைப்பீர்களா? தமிழகம் முன்னேர தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மறக்காமல் ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.