தமிழ்நாடு

பிரதமரின் மதுரை வருகை திடீர் ரத்து: என்ன காரணம்?

Published

on

பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பிரதமர் மோடி அவர்கள் மதுரையில் ஜனவரி 12-ஆம் தேதி நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது பிரதமரின் மதுரை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்,

தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும் பின்னர் ஒரு தேதியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்,

பிரதமரின் வருகைக்காக மதுரை பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் இந்த விழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது அது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version