Connect with us

இந்தியா

75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

Published

on

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடியை இன்னும் சில மணி நேரத்தில் ஏற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்னர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி அவர்கள் சிறப்புரை ஆற்றி வருகிறார். பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 75வது சுதந்திர தின விழா டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் வீராங்கனைகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கொண்டனர் என்பதும் குறிப்பாக தங்கம் என்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம் என்றும் சிறப்பாக விளையாடி அவர்கள் தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தனது உரையில் கூறியபோது நாட்டிற்கு பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி உற்சாகம் ஏற்படுத்துவோம் என்று கூறினார். மேலும் கொரோனா சமயத்தில் நமக்கு சேவை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றும் தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளை நினைவு கூறுவோம் என்றும், இந்த நாட்டை கட்டமைக்க பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள் என்றும் நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறுவதற்கான தினம் இன்று என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!