இந்தியா

மம்தா என் தலையை எட்டி உதைக்கட்டும்: பிரதமர் மோடி ஆவேசம்

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மாநில கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்பட பல பாஜக பிரமுகர்கள் குறி வைத்துள்ளது மேற்கு வங்க மாநிலத்தை தான் என்பதும், அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜியை எப்படியாவது ஆட்சியிலிருந்து இறக்கியே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கும் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தான் நேரடி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி என் தலையை எட்டி உதைக்கட்டும் ஆனால் மேற்கு வங்க மக்களின் கனவுகளை சிதைக்க நன் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி பிரதமர் ’மோடி கொள்ளையர்களின் தலைவன்’ என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version