உலகம்

மோடிக்கு போஸ் கொடுக்கவே நேரம் சரியா இருக்கு.. இதுக்கு எங்க நேரம் இருக்கு.. ராகுல் டிவிட்!

Published

on

ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை குறித்து பிரதமர் மோடி கவலையே படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.

18 நாட்களுக்கு முன் சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 15 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் இரண்டு வாரத்திற்கு முன் மாட்டிக் கொண்டு காற்று கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி போகிபீல் பாலத்தில் நின்று கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் அரசு ஒரு உயர் அழுத்த பம்ப் தயார் செய்ய கூட தயாராக இல்லை. பிரதமரே கொஞ்சம் ஊழியர்களை காப்பாற்றுங்கள்,என்று கூறியுள்ளார் .

seithichurul

Trending

Exit mobile version