இந்தியா
பல்லை உடைக்கும் வேலைக்கு பல் மருத்துவர் வந்தது ஏன்? பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிரதமர் மோடி கேள்வி
பல் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஒருவர் எதிரிகளின் பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன் என பிரதமர் மோடி காமெடியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎஸ் பயிற்சி முடிந்து பணியில் சேர உள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சமீபத்தில் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் தேசத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து அறிவுறுத்தினார். மேலும் காவல்துறை எந்த அளவுக்கு முக்கியமானது என்பதும் கடமை உணர்ச்சியுடன் அதில் பணிபுரிய வேண்டும் என்றும் அவர் அனைவருக்கும் அறிவுறுத்தினார்.
அப்போது ஒவ்வொருவராக தங்களை பிரதமரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் நவ்ஜோத் சிமி என்பவர் பல் மருத்துவராக இருந்ததாகவும் காவல்துறையின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தற்போது ஐபிஎஸ் முடித்து உள்ளதாகவும் கூறினார்.
அப்போது பிரதமர் மோடி காமெடியாக பல்வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பல்லை உடைக்கும் வேலையை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டவுடன் புன்னகையுடன் பதில் அளித்த நவ்ஜோத் சிமி, ‘புத்திசாலிதனமாக மக்களின் வலியை தீர்க்கும் பணி காவல்துறை பணி என்பதால் அந்த பணியை தேர்வு செய்ததாகவும் இந்த பணியில் தான் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் பதிலளித்தார்.
சிமியின் பதிலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இது குறித்த வீடியோவை நவ்ஜோத் சிமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.