இந்தியா
இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையில் உரையாற்றும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையில் உரையாற்றுவார் என்று டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் 5-வது முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார்.
ஊரடங்கு மே 29 வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும், பல்வேறு தளர்வு குறித்த அறிவிப்புகளையும் இதில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “நாம் எல்லோரும் புதிய யதார்த்தத்தைக் கண்டிப்பாகத் திட்டமிட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.