Connect with us

இந்தியா

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி; என்ன பேசினார்கள்?

Published

on

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாதது போல், 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நான்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று போன் மூலம் உரையாடினார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோருடன் போன் மூலம் உரையாடிய மோடி, அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

நேற்று தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்து முக்கிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான ஆக்ஸிஜன் சப்ளை என்பது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஒரு நாளில் தமிழகத்தில் 440 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டே வாரத்தில் இந்த அளவு மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மட்டுமே வழ்ங்க முன் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடந்து ஆலோசனைகளை அடுத்து, 476 மெட்ரிக் டன் அளவுக்கு தமிழகத்துக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதாக சம்மதிக்கப்பட்டது. இதற்கு உண்டான உரிய ஆணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பல குழப்பங்கள் எழுந்துள்ளன.

எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு முறையான புதிய ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்து இருந்தார்.

இப்படியான நெருக்கடியான சூழலில் ஸ்டாலினுடன் உரையாடிய மோடி, கொரோனா நெருக்கடிகள் குறித்து கேட்டுள்ளார். விரைவில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!