தமிழ்நாடு
தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் எப்போது? பரபரப்பு தகவல்
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதும் அந்த குழு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண் விவரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதிப்பெண் கணக்கிடும் பணி நிறைவடைந்து உள்ளதால் முன்கூட்டியே பிளஸ் டூ மார்க் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் கல்வி பள்ளிக்கல்வித்துறை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பத்தாம் வகுப்பில் 50 சதவீதம், பதினோராம் வகுப்பில் 20 சதவீதம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் விவரம் கணக்கிடப்பட்டு உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.