தமிழ்நாடு
பாஜக தலைமை அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும்: சொன்னது யார் தெரியுமா?
பாஜக தலைமை அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, கோவா உள்பட ஒருசில மாநிலங்களை குறி வைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் திட்டமிட்டுள்ளது. இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து பாஜகவை மட்டும் தான் என்பதும் காங்கிரஸ் கட்சியை அதிகமாக விமர்சனம் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைமை அலுவலத்தை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இடித்துவிட்டால் நாட்டில் ஏற்படும் கலவரங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த டுவீட்டிற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
“मेरा नाम सोनू है हम हिंदू हैं मैडम मेरा पूरा रोज़गार बर्बाद हो गया”
बेटा सोनू ये गुंडों लफ़ंगों दंगाइयों की पार्टी है ये न हिंदू के हैं न भारत माता के ये देश के दुश्मन हैं।
दंगे रोकने का बस एक ही उपाय।
BJP मुख्यालय पर Bulldozer चलायें।#BulldozerBJPHQ pic.twitter.com/w9RYTnISs2— Sanjay Singh AAP (@SanjayAzadSln) April 20, 2022