இந்தியா

ஆட்சியை கலைப்பதாக சீன போட்ட அமித் ஷா.. பினராயி கொடுத்த முரட்டு பதில்!

Published

on

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் விடுத்த எச்சரிக்கைக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் கேர்ளா அரசு பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இல்லையென்றால் ஆட்சியை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கு பதிலை விட பினராயி வேறு ஒரு அதிரடி காட்டி இருக்கிறார். கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்களை கைது செய்தால் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே இன்னும் பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நேற்று மட்டும் மொத்தம் 500 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமித் ஷாவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து அங்கு கைது நடவடிக்கை அரங்கேறி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version