தமிழ்நாடு

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை!

Published

on

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சிறப்பு சலுகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை என்னவெனில் அவர்கள் சொல்வதை எழுதுவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சொல்லச்சொல்ல எழுதும் போது கூடுதல் கால அவகாசம் ஆகும் என்றும், எனவே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு சொல்வதை எழுதுபவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் இருந்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version