உலகம்
உருமாறிய கொரோனா.. 3 தவணையில் தடுப்பூசி.. அனுமதி கோரும் ஃபைசர்!
கொரோனா வைரஸ் தொற்று உருமாறி வரும் நிலையில், அதைத் தடுக்கு 3 முறை தடுப்பூசி போட அனுமதி வேண்டும் என ஃபைசர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரி வருகிறது.
கொரோனா தொற்றுக்குச் சென்ற ஆண்டு இறுதியிலிருந்து உலகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணையாகப் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில கொரோனா தடுப்பூசிகள் ஒரு முறை மட்டும் போடக்கூடியதாகவும் உள்ளன.
ஆனால் தற்போது கொரோனா தொற்று உருமாறி உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா 2-ம் அலை முடிந்து 3-ம் அலை விரைவில் வரும் அச்சமும் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 48% மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர். சில பகுதிகளில் இதை விட குறைவாக உள்ளது. டெல்டா வகை கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.
எனவே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை வேகமாக அதிகரிக்க, 3வது தவணையாகவும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். 12 மாத கால இடைவெளியில் இந்த 3வது தவணை தடுப்பூசிகளைப் போடலாம் என ஃபைசர் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
விரைவில் உலகம் முழுவதும் மக்கள் 3 முறை கொரோனா தடுப்பூசி போடு வேண்டி வரும் என மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.