சினிமா செய்திகள்

ஆறு உதவியாளர்களுடன் மாயமான மீராமிதுன்: இயக்குனர் புகார்

Published

on

ஆறு உதவியாளர்களுடன் நடிகை மீராமிதுனை காணவில்லை என இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மீராமிதுன் அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார் என்பதும் குறிப்பாக பட்டியல் இனத்தவர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’பேயக் காணோம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த நிலையில் இந்த படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி வந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் மீராமிதுன், தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருடன் 6 உதவியாளர்களுடன்  மாயமாகி உள்ளதாகவும், அவர் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள முக்கிய பொருள்களையும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திரையுலகின் அனைத்து அமைப்புகளிலும் புகார் அளிக்க போவதாக இயக்குனர் அன்பரசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version