தமிழ்நாடு

ரூ.101ஐ தாண்டியது பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.01 என்ற விலையில் விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.60 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல் விலை மீண்டும் 101 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் அதேபோல் டீசல் விலை 97 ரூபாய் நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெட்ரோல் விலை தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டி இருந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைத்தது. இதனை அடுத்து 100 க்கும் கீழ் பெற்றோல் விலை வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்ததை அடுத்து மீண்டும் 101 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து 100 ரூபாயை நெருங்கி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version