தமிழ்நாடு
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டுவீச்சு: பரபரப்பு தகவல்
![bjp2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/bjp2-1.jpg)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக என இருந்தாலும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்று கூறுமளவுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திடீ ரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் ஆனால் அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது.